Wednesday, April 2, 2008
பூக்களே முட்களானால்...!
போலிகள் பெருக்கத் தாலே
பொறுப்புகள் தாழ்ந்து போச்சு!
காலிகள் பெருக்கத் தாலே
காவலர் பெருமை போச்சு!
தாலிகள் இல்லாத் தாய்மை
தமிழ்ப்புல மாண்பு போச்சு!
வேலிகள் பயிரை மேயும்
வேதனை தேசம் எங்கும்!
சேலைகள் நகைகள் என்ற
சிங்காரக் கனவில் பெண்கள்!
மாலைகள் மரியா தைகள்
மாளிகைக் கனவில் ஆண்கள்!
பாலைப்பா சத்தி னோடு
புகட்டவும் பொழுது மின்றி
ஆளையே வளர்த்தோம் வீட்டில்
அன்புதான் வளர வில்லை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment